சுப வீரபாண்டியன் அவர்களின் பேச்சு
கையெழுத்தாய்வு என்ற தலைப்பில் இணைக்கப்பட்டுள்ளது
Wait,
Animated Picture
My Whatsapp Number: 9791714474
என்னுடன் Whatsapp ல் இணைய விரும்புகிறவர்கள் எனக்கு வேண்டுகோள் அனுப்பும்போது
பெயர்,
இருப்பிடம்,
மொழி
இவற்றை அவசியம் குறிப்பிடவும்
28-01-2017 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்
பக்தி….
நீதான் எல்லாமும், நீதான் நானும். அதாவது நான்தான் எல்லாமும் என்றாகும் அதாவது உன்னிடம் நான் இதைத்கொடு அதைக்கொடு என்று வெளி வஸ்துக்களைக் கேட்கவில்லை. என்னையே எனக்குக் கொடு என்றே பிரார்த்திக்கிறேன். இப்படிச் சொல்கிறார் ஸ்ரீ ஸதாசிவ பிரம்மேந்திராள்.
* இந்த ரீதியிலேயே சிவ மானஸிக பூஜா என்ற ஸ்தோத்திரத்தில் பிரார்த்தித்திருக்கிறார் ஸ்ரீ ஸதாசிவ பிரம்மேந்திராள்.
மஹ்யம் தேஹி ச பகவான் மதீயமேவ ஸ்வரூபம் ஆனந்தம்
என் ஆனந்த ஸ்வரூபத்தையே எனக்குக் கொடு என்கிறார்.
* இப்போது நாம் எல்லோரும் நம் நிஜ ஸ்வரூபத்தை விட்டுவிட்டு வேஷத்தில் இருக்கிறோம்.
நமக்கு வேண்டியவர்களை விட்டுவைத்தால் தவிக்கிறோமே, நம்மையே விட்டுவிட்டதற்கு எவ்வளவு தவிக்க வேண்டும். நம் ஆனந்த ஆத்ம ஸ்வரூபத்தோடு அதுவே நாமாக எப்போது கலக்கப்போகிறோம் என்ற தவிப்பும், அதைப்பற்றிய நினைப்பும் நமக்கு ஸதா இருக்க வேண்டும்.
* பரமாத்மாவுடன் கலப்பதற்காக இப்படிச் சகிக்கமுடியாமல் தவிப்பதுதான் உண்மையான பிரேமை. அந்தப் பிரேமைக்குத்தான் பக்தி என்று பெயர்
N Jambunathan (Ex: REVL & IMPAL)
Rengarajapuram-Kodambakkam-Chennai-Mob:9176159004
Subject: The need of agitation for Prohibition.
மதுவால் தன் குடும்பத்தை இழந்த ஒரு தமிழனின் வேண்டுகோள் :
மாணவர்களே உங்களால் இன்று ஜல்லிக்கட்டு போரட்டம் வெற்றிப்பெற போகிறது.
மகிழ்ச்சி.
இது போதுமா தமிழர்களுக்கு ?
அதைவிட முக்கியமான நம் வீட்டு தாய்மார்கள், சகோதரிகள், தோழிகள், தாலி அறுக்க, விதவை ஆக காரணமான மதுவை ஒழிக்க இந்த போரட்டத்தை ஜல்லிக்கட்டு வெற்றிக்குப்பின் மது ஒழிப்பு போரட்டமாக மாற்றுங்கள்.
மீண்டும் இதுபோல ஒரு புரட்சி நடைபெறுமா?
தெரியவில்லை
ஏற்பட்ட இப்புரட்சியை மது விலக்கு போரட்டமாக பயன்படுத்துவத மூலம் நம் வீட்டு தாய்மார்களின், பெண்களின் தாலிகள் அறுபாடமல் காக்கப்படும்.
"எங்க வீட்ல யாரும் குடிக்கல!! எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல!!!" என எண்ணாதீர்கள்.
உன் சகோரதன், சகோதரி, உறவினன், நண்பன், தோழி வீட்டில் நிச்சயம் ஒரு குடிகாரன் இருப்பான். அவனால் அக்குடும்பமும் அதை சார்ந்த நீயும் பாதிக்கப்பட்டிருப்பீர்கள்.
இன்று உள்ள நிலை தொடர்ந்தால் நாளை உன் வீட்டில் உன் அப்பா, உன் பிள்ளை, உன் பேரப்பிள்ளை குடிகாரன் ஆவான்.
அப்பொழுது நீயும் என்னை போல வருந்துவாய்.
குடியால் குடிப்பவனுக்கு வரும் சிக்கல்களை நீங்கள் அறிவீர்கள். ஆனால்,
மது அருந்துவதால் குடிகாரனைவிட அவனை சார்ந்தோர்களுக்கும் சுற்றியுள்ளவர்களுக்கும் நடக்கும் பிரச்சனைகள் அதிகம்.
அதில் சில :
# குடிகாரன் குடித்துவிட்டு சாலையில் ஒழுங்காக செல்பவனை விபத்து எற்படுத்தி கொல்வது. இதன் மூலம் அவன் குடும்பத்தையே அழிப்பது.
# மதுவால் இறந்து நம் வீட்டு தாய்மார்கள், சகோதரிகள், தோழிகள் தாலியை அறுத்து அவர்களை விதவை ஆக்குவது.
# மதுவால் இறந்து தம் வீட்டு பிள்ளைகளை அநாதைகளாக்குவது. அவர்கள் வாழ்வை தடம் மாற செய்வது.
# குடிவெறியில் கற்பழிப்பு, குடிவெறியில் சிறு குழந்தைகளையும் கற்பழிப்பது, பின் அவர்களை கொன்றும் விடுவது.
# செக்ஸ் டார்ச்சர் கொடுப்பது.
# கொலை.
# திருட்டு.
# விவாகரத்து.
# கள்ளகாதல்.
# குடிகாரன் வீட்டுப்பிள்ளைகளின் படிப்பு, எதிர்காலம் வீணாகுதல்.
# அப்பன் மற்றும் சகோதரன் குடியால் பல பெண்கள் திருமணம் நடைபெறாமல் முதிர்கன்னிகளாகி அவர்கள் வாழ்க்கை அழிவது.
# குடியால் ஆண்மை போய் பல குடும்பங்கள் வாரிசுகள் இன்றி அழிந்து போவது.
# குடும்ப வருமானம், சொத்து அழிந்து போகுதல்.
# தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் குடித்துவிட்டு, தொல்லை கொடுத்து வீட்டை நரகமாக்குவது.
மேற்கூறியவைகள் சில.
இன்னும் எழுத ஆரம்பித்தால் நிறைய எழுதலாம்
எனவே ஜல்லிக்கட்டு பேராட்ட வெற்றிக்குபின் கலைந்து செல்லாமல் மது விலக்கு போரட்டமாக மாற்றுங்கள்.
இறை அருளால் மாபெரும் புரட்சி வெடித்துள்ளது. மீண்டும் இத்தகைய வாய்ப்பு அமையாது.
அரசியல் கட்சிகளை நம்பி பயனில்லை.
நம் சந்தியினரின் எதிர்காலம் காக்க நாமே பேரடுவோம். இந்த புரட்சியை பயன்படுத்தி கொள்வோம்.
இதை கூறும் நான் எந்த கட்சியையும், எந்த அமைப்பையும் சேர்ந்தவனல்ல.
மதுவால் தன் குடும்பத்தை இழந்த ஒரு தமிழன் மட்டுமே.
உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் இப்பதிவை SHARE செய்யுங்கள்.
குடியால் அழிந்த கடைசி குடும்பம் என்னுடையதாக இருக்கட்டும்.
---------------------------------------------------
Thanks to Mr.Padmagirisan for forwarding
this appeal for Prohibition.
- SIVA