Thursday 16 March 2017

[www.keralites.net] : : 17-03-2017 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல் [3 Attachments]

 





 
 
Wait, 
 
Animated Picture
My Whatsapp Number:   9791714474
என்னுடன் Whatsapp ல் இணைய விரும்புகிறவர்கள் எனக்கு வேண்டுகோள் அனுப்பும்போது       
பெயர்,
இருப்பிடம்,
மொழி
இவற்றை அவசியம் குறிப்பிடவும்
Hi  என்று அனுப்பாதீர்கள்
 
 
17-03-2017  திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்
 
chicks.gif
 
17317t.JPG
 
 
சுமங்கலியும்,   குத்து விளக்கும்...!
Info on Sumangalis and lighting lamps
-Do's and Don'ts...!
 
 
🌟 சிறிய வெள்ளி மற்றும் பித்தளை 
குத்து விளக்குகளையும், காமாட்சி விளக்குகளையும் 
வாங்கி வீட்டில் பயன்படுத்தலாம்.
எவர்சில்வர் குத்து விளக்குகளை ஆலயத்திலும்,
 வீட்டிலும் பயன்படுத்தக் கூடாது.
 
🌟 சந்தனம், குங்குமம் திலகமிட்டு குத்து விளக்கின் அடிப்பாகத்திலும், நடுப்பகுதியிலும், உச்சிப் பகுதியிலும்
 பு ச்சு வேண்டும்
விளக்கில் முதலில் திரியைப் போட்டு பின்னர் 
எண்ணெய் ஊற்றக் கூடாது
முதலில் எண்ணெய் ஊற்றி விட்டு பின்னர்தான் 
திரிபோட வேண்டும்.
 
🌟 குத்து விளக்கின் தீபம் கிழக்கு முகமாக 
ஏற்றினால் துன்பங்கள் நீங்கி வசீகரம் உண்டாகும்.
 மேற்கு முகமாக தீபம் ஏற்றினால் கிரக தோஷம்,
 பங்காளி பகை உண்டாகும்
வடக்கு முகமாக தீபம் ஏற்றினால் கல்வி மற்றும்
 சுப காரியங்களில் ஏற்படும். தடைகள் நீங்கும்
திரண்ட செல்வம் உண்டு.
 தெற்கு முகமாக விளக்கு ஏற்றினால் அபசகுனம்,
 பெரும் பாவம் உண்டாகும்.
 
🌟 எந்தவொரு பு ஜை தொடங்கும் முன் வீட்டில்
 உள்ள சுமங்கலி, குத்துவிளக்கை ஏற்றி விட்டு
 வணங்கிய பிறகு பு ஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.
 
🌟 விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும்.
 குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.
 இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.
 
🌟 காலையில் சு ரிய உதயத்திற்கு முன்பும்
மாலையில் சு ரிய அஸ்தமனத்துக்கு முன்பும்
 வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும்.
 
🌟 பசுநெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய்,
 இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய
 இந்த ஐந்தும் கலந்த பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி 
ஐந்து முகம் ஏற்றி பஞ்சமி திதியில் தேவியை
 வழிபட்டால் அம்மனின் அருள் கிடைக்கும்
பஞ்சதீப எண்ணெய் ஊற்றி ஐந்து முகம் ஏற்றி
 வடக்குப் பக்கம் பார்த்து தீபம் ஏற்றி வந்தால்
 எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்
 
🌟 நெய் விளக்கு ஏற்றினால் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும், இலுப்பை எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் 
பு ஜிப்பவருக்கும், பு ஜிக்கப்படும் இடத்திற்கும் விருத்தி.
 விளக்கு எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால்
 துன்பங்கள் விலகும்
நல்லெண்ணெய் கொண்டு குறிப்பாக சனிக்கிழமை விளக்கு ஏற்றினால் ஏழரைச் சனியின் தாக்கத்திலிருந்தும் விடுபடலாம். மேலும் மகாவிஷ்ணுவின் அருளை பெறலாம்.
 
🌟 தீபத்தை பு வின் காம்பினால் அணைக்கவும்.
 வாயினால் ஊதி அணைக்க கூடாது.
 பெண்கள் வீட்டில் இருக்கும் பட்சத்தில் அவர்கள் தான்
 தீபத்தை பு வின் காம்பினால் அணைக்க வேண்டும்
ஆண்கள் அணைக்க கூடாது.
-----------------------------------------------
 
 
ரகசியம் எதுவுமே ரகசியம் அல்ல!!!!!
 
நாம் ரகசியமாக ஒரு காரியத்தைச் செய்தால் யாருக்குத் தெரியப்போகிறது என்று நினைத்துக்கொண்டு தனி அறையிலோ, தனி இடத்திலோ ஒரு காரியத்தைச் செய்கிறோம். ஏனெனில் இரண்டாவது ஆள் ஒருவருக்குத் தெரிந்தால் அதன் பெயர் "ரஹசியம்" அல்ல என்பதும் அந்த ஆள் எவ்வளவுதான் நெருங்கிய உறவினராக இருந்தாலும், நண்பராக இருந்தாலும் அது வெளியே பரவ வாய்ப்பு உண்டு என்றும் நமக்குத் தெரியும்.
 
ஆனால் இந்துமதம் என்ன சொல்கிறது என்றால் நீங்கள் செய்யும் எதுவுமே ரகசியம் அல்ல; ஏனெனில் ஒன்பது பேர் எப்போதும் உங்களைக் கண்காணிக்கிறார்கள்; அந்த ஒன்பது சாட்சிகளை மீறி எதையும் செய்ய முடியாது.
 
யார் அந்த ஒன்பது பேர்?
 
பஞ்ச பூதங்களான நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்(வெற்றிடம்); இது தவிர சூரியன், சந்திரன்,யமன், காலம்(நேரம்).
 
பஞ்சபூதம் என்று சொல்லிவிட்டாலேயே எல்லாம் அடங்கிவிடும். இருந்த போதிலும் சூரியனும், சந்திரனும் நன்கு தெரிந்த பிரகாசமான பொருள் என்பதால் அதைச் சேர்த்தனர். அல்லது இரவும் பகலும் — 24 மணி நேரமும் என்று பொருள் கொள்ளவும் அவை உதவும்.
 
யமன் என்பவன் யார்? அவனுடைய கணக்குப்பிள்ளை சித்திர குப்தன் என்பர் இதன் பொருள் என்ன வென்றால் நாம் செய்யும், நாம் நினைக்கும் ஒவ்வொரு விஷமும் ஒரு சித்திரத்தை — படத்தை உருவாக்குகிறது. அந்தப் படம் நமக்குத் தெரியாமல் (குப்த=ரகசியமாக) இருக்கிறது. இந்த விஞ்ஞான உண்மையையே இந்துக்கள் 'சித்திர' 'குப்த' என்றனர்.
 
ஒரு கொசு நீரில் உட்கார்ந்தால் கூட நீரில் அதிர்ச்சி ஏற்பட்டு வளையங்கள் உண்டாகும். ஆனால் நமக்கு கண்ணுக்குத் தெரியாது.அது கொசுவுக்குத் தெரியும். ஒரு எறும்பு ஊர்ந்து சென்றால்கூட ஒரு வழித்தடம் உண்டாகும். அது நமக்குத் தெரியாது. எறும்புக்கு அந்தப் பாதை தெரியும். அதுபோல நாம் எண்ணும் ஒவ்வொரு எண்ண்மும் ஒரு படத்தை உண்டாக்கும்; அது நமக்குத் தெரியாது; சித்திரகுதன் அல்லது யமனுக்குத் தெரியும்.
 
சித்திரகுபதன் அல்லது யமன் என்பவன் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர். நம்முடைய எல்லா நல்ல, கெட்ட செயல்கள், எண்ணங்கலையெல்லாம் கூட்டிக் கழித்து பாவ புண்ணியங்களைப் பட்டியல் போட்டுவிடுவர்.
 
நீர், நெருப்பு, ஆகாயம் முதலியன இல்லாத இடமே இல்லை. அவர்கள் நம்மைக் கவனிக்கிறார்கள் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை. இந்துக்களுத் தான் இந்த விஞ்ஞான உண்மைகள் தெரியும். இதுவரை வேறு யாருக்கும் அது தெரியாது.
 
நீரை மந்த்ரம் மூலம் அனுகுண்டாக மாற்றும் வல்லமை நம் ரிஷி முனிவர்களுக்கு இருந்தது. ஒரு உள்ளங்கை நீரை மந்திரம் மூலம் சாபமாகவோ வரமாகவோ மாற்றும் அரிய வித்தை அவர்களுக்கு மட்டுமே தெரியும். இதனால்தான் பெண்ணைக் கல்யாணம் செய்துகொடுத்தாலும், தானங்களை செய்தாலும் நீரைப் பயன்படுத்தினர். சாபம் கொடுக்கவும் வரம் கொடுக்கவும் நீரைப் பயன்படுத்தினர்.
 
நெருப்பு என்பது இல்லாமல் மனிதன் முன்னேறமுடியாது. உடம்பிலுள்ள அக்னி ஜடராக்னி. வெளியே உள்ள அக்னி சாட்சியாக திருமணம் செய்துவிட்டால் அதை மீறக்கூடாது. பழைய அரசர்கள் அக்னி சாட்சியாக உடன்படிக்கை செய்ததை நமது கல்வெட்டுகள் கூறுகின்றன. அக்கினி சாட்சியாக கோவலன் – கண்ணகி திருமணம் செய்து கொண்டதை தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம் சொல்லும். நீர் ஆறாக ஓடும்படி தாரைவார்த்து தானம் செய்ததை சங்க இலக்கியம் செப்பும்.
 
காலம் (நேரம்) என்பது நம்மைக் கவனிக்கிறது. அதை நிறுத்த யாராலும் முடியாது. கடிகாரம் ஓடிக்கொண்டிருபாது போல ஒவ்வொன்றும் கணக்கிடப்படுகிறது.
 
விண்ணில் உலவும் செயற்கைக் கோள்கள், நம் வீட்டு கொல்லைபுறத்தைக் கூடப் படம் பிடிக்கும்; கூகுள் மேப் மூலம் நம் நண்பர் வீட்டிற்குள் யார் வந்து செல்கிறார்கள் என்பதை நம் வீட்டுக் கம்ப்யூட்டரிலேயே காணமுடியும்; சி.சி. டிவி மூலம் கொலைகாரனைக் கூடக் கண்டுபிடிக்கமுடியும். இன்ப்ரா ரெட் காமிரா, பைனாகுலர் மூலம் இருட்டில் நடப்பதையும் காணமுடியும். ஆனால் இவைகளிடமிருந்து தப்பிக்க வழி உண்டு. இந்துக்கள் சொன்ன ஒன்பது கர்ம சாட்சிகளிலிருந்து தப்பிக்க யாராலும் முடியாது!!!
 
ஆகவே ஒன்பது சாட்சிகளுக்குப் பயந்து நாம் நல்ல காரியங்களையே செய்ய வேண்டும்; நல்ல காரியங்களையே எண்ண வேண்டும்.
N Jambunathan (Ex: REVL & IMPAL)
Rengarajapuram-Kodambakkam-Chennai-Mob:9176159004
 
 


__._,_.___
View attachments on the web

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 3 photo(s) from this topic.
image002.gif 17317t.JPG image001.jpg

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

No comments:

Post a Comment